ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கத்தின் இன்டராக்ட் வார விழா கொண்டாட்டம் 12/11/25 (வெள்ளிக்கிழமை) மாலை 02:30 மணியளவில் திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவின் தலைமை விருந்தினராக ரோட்டேரியன் அஃப்ரோஸ் ஷா (ரீ பெல் சிட்டி திருச்சிராப்பள்ளி) அவர்களும் சிறப்பு விருந்தினராக அருட்தந்தை சகாயராஜ் (முதல்வர், ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சோமரசம்பேட்டை, திருச்சி) அவர்களும் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்.
இவ்விழாவில் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உலக அமைதி குறித்த ஓவியப் போட்டியும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
TRF மற்றும் End Polio Now பங்களிப்புக்கான தலைவர் மற்றும் செயலாளரை ரோட்டேரியன் அஃப்ரோஸ் ஷா பாராட்டி சிறப்பு செய்தார்
விழாவில் கிளப்பின் அனைத்து உறுப்பினர்களும் உளமகிழ்வுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஓவியப் போட்டி
பேச்சு போட்டி
பரிசளிப்பு விழா
END POLIO NOW






























